1



அன்பு எப்போது ஒரு கட்டத்தை தண்டுகிறதோ அப்போதே சந்தேகம், சண்டைகளும் வலுப்படுகிறது. அன்புக்கு ஒரு விதி உண்டு. நீ விரும்பும் ஒருவருக்கு அதிக அன்பு கொடுக்கும்பொழுது அவர்கள் விலகுவர், அவர்கள் விலகும்பொழுது அதே அன்பு உனக்குள் கோபமாக மாறும் அப்பொழுது  விலகியவர் உன்னை விரும்புவர். இரவு முடிந்ததும் பகல் வருவது போல துன்பம் முடிந்து இன்பம் வரும்.காத்திருக்கத துன்பம் துன்பமாகவே போய்விடும்.      
திருமணம் முடிந்து கணவன் மனைவியிடம் சில நிபந்தனைகள் வைக்கிறான்.
 
கணவன் : திருமணத்திற்கு பிறகு வேலை வேண்டாம்?
மனைவி : விட்டுவிட்டேன்!

கணவன் : நம்பரை மாற்ற வேண்டும.
மனைவி : மாற்றிவிட்டேன்!

கணவன் : Facebook கூடாது.
மனைவி : நிறுத்தி விட்டேன்!

கணவன் : ஆண் நண்பர்கள் நட்பை தொடரவேண்டாம்.
மனைவி : விட்டுவிட்டேன்!

கணவன் : லெக்கின் அணிந்தால் கால் அளவு தெரியும்.
மனைவி : சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!

கணவன் : Heels வைத்த செருப்பு கூடாது.
மனைவி : தூர ஒதுக்கினேன்!

கணவன் : ஜாக்கெட்டுக்கு தனியாய் ஜன்னல் வேண்டாம.
மனைவி : கழுத்துவரை மறைத்து தைத்துக்கொண்டேன்!

கணவன் : உதட்டு சாயம் கூடாது.
மனைவி : ஒன்றும் போடாமல் விட்டுவிட்டேன்!

கணவன் : பார்லர் பக்கம் வேண்டாம்.
மனைவி : பாலாடை தயிரோடு நிறுத்திக்கொண்டேன்!

கொஞ்ச நாள் சந்தோஷமாய் இருந்து அதன்பின் குழந்தை பற்றி யோசிக்கலாம் என்றார், அதுவரை தவறாமல் மாதந்தோறும் மாத்திரை தின்றேன்!

வாரத்தின் ஏழுநாளும் அவருக்கு பிடித்ததே சமைத்தேன்!

வாரக்கடைசியில் நண்பர்கள் என்று நடுராத்திரி திரும்பினார்!

இரவு ஒரு மணிக்கு Reached ? என்று பெண் பெயரில் மெசேஜ் வந்தது!

மனைவி : பொழுது விடிந்ததும் யாரென்று கேட்டேன்,
கணவன் : Ex lover என்றார்!

மனைவி : விட்டுவிடச் சொன்னேன்,
கணவன் : முடியவில்லை என்றார்!

மனைவி : முயன்றால் முடியும் துணைக்கு நானிருக்கிறேன் என்றேன்!
கணவன் : நீயும் அவளும் ஒன்றா என்றார்,

மனைவி : வேறு வேறு தான், இது legal அது illegal என்றேன்!
அறைந்துவிட்டார்! தூக்கம் போனது!

மனைவி : உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டேன், எனக்காக இது ஒன்றை மட்டும் விட்டுவிடுங்கள் என்றேன்!
கணவன் : முடியாது it's true love என்றார்!

மனைவி : எனக்கும் கூட true love இருந்தது என்றேன்!
மறைத்ததற்காக ஒரு வாரம் அடித்தார்! தாங்கிக்கொண்டேன்! ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை!


திரும்பவும் Facebook open செய்தேன்!

திரும்பவும் lipstick போட்டேன்!

திரும்பவும் ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைத்தேன்!

திரும்பவும் லெக்கின் போட்டேன்!

பார்லர் பக்கம் தலைவைத்து படுத்தேன்!

எனக்கு பிடித்ததையும் சமைத்தேன்!

முகநூல் முழுவதும் காதல் கவிதைகளாய் எழுதினேன்!

திரும்பவும் வேலைக்கு போனேன்,

திரும்பும் போது லேட்டாக வந்தேன்!

ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,

அவ்வப்போது weekend party என்று வெளியே சென்றேன்!

ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,

மொபைலுக்கும் laptop க்கும் Password போட்டேன்!

அவருக்கு இருந்த ஆயிரம் வேலைகளில் முக்கியமான வேலை என்னை வேவு பார்ப்பது!

தன் வீட்டு சாப்பாடு தனக்கு மட்டுமே சொந்தம் என்று திருடு போகாமல் காப்பாற்ற லீவு நாட்களில் கூட அவர் வெளியே போவதில்லை!

எப்படியாவது என் ex lover ஐ கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று என்னைச்சுற்றியே வட்டமிடுகிறார்!

எந்த ஜென்மத்திலும் அவரால் கண்டுபிடிக்க முடியாது, காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!

இல்லாத ஒருவனை தேடித்தேடியே என் அருகாமையில் சுற்றுவார், அவளை விட்டு தூரம் வருவார்!

அவளை மறந்து என்னை மட்டுமே நினைக்கும் வரை எனக்கு ex lover வேண்டும்!

நீ யாரென்றே தெரியாது என் அன்பு காதலனே, But I love you darling!! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

கருத்துரையிடுக

 
Top