
இப்போதைய நிலைமைக்கு கல்யாணத்துக்கு தயாராக உள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோரின் விகிதாசாரத்தைக் கணக்கெடுத்தாள், பெண்களைவிட ஆண்களே அதிக எண்ணிக்கையில் திருமணத்திற்கு சரியான வயதையும் தாண்டி காத்திருக்கின்றனர்.
திருமணத் தடை போக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகப் பரிகாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகைப் பரிகாரங்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பது, வாழை மரத்திற்குத் தாலிகட்டி பிறகு அதனை வெட்டிவிடும் சடங்கு. இந்த சடங்குகளைச் செய்வதால் திருமணத்தடை நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை!
நான் : ம்ம் பாத்துட்டு இருக்காங்க ஜி...
நண்பன் : சீக்கிரம் விருந்து போடுங்க....
2 வருஷம் முடிந்து
நண்பன் : ஜி எனக்கு கல்யாணம் மறக்காம நீங்க குடும்பத்தோட வரணும். நீங்க உங்க கல்யாணத்துக்கு என்ன கூப்பிட மறந்துடீங்களா?
நான் : ஜி உங்களுக்குக்கு சொல்லாமலையா. இன்னும் எதுவும் செட்டாகள..
நண்பன் : இதை எல்லாம் தள்ளி போடாதிங்க சட்டுபுட்டுன்னு பாருங்க.
1 வருஷம் முடிந்து
நண்பன் : இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க ஜி.. எனக்கு பொண்ணு பொறந்திருக்கா..
நான் : வாழ்த்துக்கள்
நண்பன் : என்ன ஜி இன்னுமா செட் ஆகல?
நான் : நானும் பாக்குறேன் பாக்குறேன் ஏதாவது தடங்கல்ல நின்னு போகுது
நண்பன் : எனக்கு என்னவோ உங்க ஜாதகத்தில் தான் பிரச்சனைன்னு.. எதுக்கும் ஒரு நல்ல ஜோசியர்கிட்ட காமிங்க.
உங்களுக்கு தோஷம் இருக்கு அத நிரவேத்தினா அடுத்த மாதமே திருமணம் நடக்கும்னு. இதற்க்கு நான் காசு வாங்குவது இல்ல என சொல்லிவிட்டு ஜாதகம் பார்த்த சார்ஜ் னு ஒரு 300 வாங்கிடுவாங்க
இந்த சார்ஜுக்கும் கூட ஒரு ஸ்லாப் இருக்கு நீங்க சுமாரான உடையில் இருந்த கொஞ்சம் கம்மியாகவும் கார்ல போனா அதிகமாகவும் இருக்கும். ஒரு விசிடிங் கார்டு உங்களுக்கு தருவாங்க இவர போய் பாருங்க எல்லாம் நல்லபடியா முடியும்னு சொலுவாங்க.

நம்ம போய் அந்த எஜன்ட பாக்குற கேப்ல ஜோசியருக்கும் எஜண்டுக்கும் ஒரு டீலிங் நடக்கும்.
தோஷத்தில் பல பேக்கேசுகள் அவர்களிடம் தயாராக இருக்கும் அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே இருக்கும்
திருமண தோஷங்கள்

செவ்வாய் தோஷம்:
ராகு-கேது தோஷம்:
சூரிய தோஷம்:
களத்திர தோஷம்:
புத்திர தோஷம்.
மாங்கல்ய தோஷம்,
களத்திர தோஷம்

வாழைமரத்திற்கு தாலிகட்டி பின்பு வெட்டிவிடுவதால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்று பரிகாரச் சடங்கு நடத்த வேண்டும். இரு தார யோகம் உள்ளோருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சடங்கு என்றும் சொல்வார் அதாவது, ஜாதகத்தில் இரு மனைவிகளை உடையவர் என்ற அறிகுறி இருந்தால் முதல்மனைவியாக வாழைமரத்திற்கு தாலிகட்டிவிட்டு அதனை வெட்டியபிறகு இரண்டாம் தாரமாக பெரியவர்கள் பார்த்துவைத்திருக்கிற பெண்ணை மணமுடித்துக்கொள்ளலாம்,
பித்ரு தோஷம்
பெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து, தற்கொலை, அகால மரணமடைந்தவர்கள்… இவர்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும் என இரண்டு தோஷத்திற்கும் ஒரு இணைப்பு கொடுப்பார்கள்.
போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டமாகிவிடும்னு சொல்லுவாங்க...



இதனால் பலன் பெறுபவர்களை விட எமாருபவர்களே அதிகம். அனால் இவ்ளோ செலவு பண்ணுனதுக்கு ஒரு மன திருப்பி என்னனா வாழை மரத்துகாவது தாலி கட்டிவிட்டோம்மென்று.
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.